திடக்கழிவு
மேலாண்மை
திடக்கழிவு என்பது நகர்ப்புறக்
கழிவுகள், மருத்துவக்
கழிவுகள், தொழிற்சாலைக் கழிவுகள் மற்றும் மின்னணுக் கழிவுகள்
ஆகியவற்றை உள்ளடக்கியது. பல்வேறு வகையான திடக்கழிவுகளை நிலத்தில் நிரப்புவதால்
நிலம் வெகுவாக பாதிக்கப்பட்டு சீர் குலைகிறது.
திடக்கழிவு மேலாண்மை என்பது
வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளில் உற்பத்தி ஆகும் கழிவுப் பொருட்களை சேகரித்தல், சுத்தப்படுத்துதல்
மற்றும் முறையாக வெளியேற்றுதல் ஆகியவற்றை உள்ளடக்கியது.
(i) தனித்துப்
பிரித்தல் : பல்வேறு வகையான திடக்கழிவுகளை மக்கும் தன்மை உள்ளவை மற்றும்
மக்கும் தன்மையற்றவை என தனித்து பிரிப்பதாகும்.
(ii) நிலத்தில்
நிரப்புதல் : தாழ்வான பகுதிகளில் திடக்கழிவுகளை நிரப்புவது ஆகும். கழிவுப்
பொருட்களை நிரப்பிய பிறகு அதன் மேல் மண்ணை ஒரு அடுக்கு நிரப்பி சரக்கு ஊர்திகள்
மூலம் அழுத்தச் செய்யலாம். 2 முதல் 12 மாதங்களுக்குள் கழிவுகள்
நிலைப்படுத்தப்படுகின்றன. அதில் உள்ள கரிம பொருட்கள் சிதைவடைகின்றன.
(iii) எரித்து சாம்பலாக்கல் : எரியும் தன்மை உடைய கழிவுகளான மருத்துவமனை கழிவுகளை முறையாக அமைக்கப்பட்ட எரியூட்டிகளில் அதிக வெப்பநிலையில் எரித்து சாம்பலாக்கலாம்.
(iv) உரமாக்குதல்
:
உயிரி சிதைவடைய கூடிய கழிவுகளை மண்புழுக்களை பயன்படுத்தியும் நுண்ணுயிரிகளைப்
பயன்படுத்தியும் சிதை வடையச் செய்து மட்கிய உரமாக மாற்றுவதாகும்.
• பழைய புத்தகங்கள், வாரப்
பத்திரிகைகள், செய்தித்தாள்கள் ஆகியவற்றை மீண்டும் காகித
ஆலைகளில் பயன்படுத்தி காகித உற்பத்தி செய்யலாம்.
• வேளாண் கழிவுகள், தேங்காய்,
சணல், பருத்தியின் தண்டு, கரும்புச் சக்கை ஆகியவற்றை கொண்டு காகிதங்கள் மற்றும் அட்டைகள்
தயாரிக்கலாம். நெல் தவிடைக் கால்நடைத் தீவனமாக பயன்படுத்தலாம்.
• மாட்டுச் சாணம் மற்றும் பிற
உயிரி கழிவுகளை கொண்டு கோபர் கேஸ் எனப்படும் உயிரி வாயு உற்பத்தி செய்வதோடு அதனை
வயல்களில் உரமாகவும் பயன்படுத்தலாம்.
கழிவுகளை சிறப்பான முறையில்
கையாளு வதற்கு 4R முறை ஏற்றதாகும். Reduce - குறைத்தல், Reuse
- மறுபயன்பாடு, Recovery - மீட்டெடுத்தல்
மற்றும் Recycle – மறுசுழற்சி