கழிவுநீர்
மேலாண்மை
இந்தியாவின் நீரை
மாசுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிப்பவை வீட்டு உபயோக மற்றும் தொழிற்சாலை
உபயோகக் கழிவுநீர் ஆகியவையாகும். கழிவுநீர், விவசாய நிலங்களை அசுத்தப்படுத்துவதோடு, சுற்றுச்சூழல் சீர்கேட்டையும் ஏற்படுத்துகின்றது.
· வீட்டுப் பயன்பாடுகள்
· சாய மற்றும் துணி உற்பத்தி ஆலைகள்
· தோல் தொழிற்சாலைகள்
· சர்க்கரை மற்றும் சாராய ஆலைகள்
· காகித உற்பத்தி தொழிற்சாலைகள்
வழக்கமான கழிவுநீர் சுத்திகரிப்பு முறை கீழ்க்கண்ட படிநிலைகளில் கையாளப்படுகிறது. அவையாவன வடிகட்டுதல், காற்றேற்றம், படிவு அகற்றுதல் மற்றும் நீர் மறுசுழற்சி
வடிகட்டுதல்
: வீடுகள்
மற்றும் தொழிற்சாலைகளில் உருவாகும் கழிவு நீரில் உள்ள திடப்பொருட்களும், மண்ணும்
இம்முறையில் வடிகட்டிப் பிரிக்கப்படுகிறது.
காற்றேற்றம்: வடிகட்டப்பட்ட கழிவு நீரானது
காற்றேற்றம் செய்வதற்காக அதற்குரிய தொட்டிக்கு அனுப்பப்படுகிறது. இந்நிலையில்
நுண்ணுயிரிகள், காற்றின் உதவியுடன் உயிரிய சிதைவடைதலுக்கு உட்படுத்தப்பட்டு
நீக்கப்படுகிறது.
வீழ்படிவு
செயல் முறை:
இம்முறையில், நீரில் மிதந்த நிலையில் உள்ள திண்மப் பொருட்கள் நீரினடியில் வீழ்படிவாக
சென்று சேருகின்றன. இவ்வாறு சேகரமாகும் வீழ்படிவுகள் சேறு போன்று காணப்படும். இது
படிவு என்று குறிப்பிடப்படுகிறது.
படிவு
அகற்றுதல்:
தொட்டிகளில் சேகரமாகும் படிவுகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் பாதுகாப்பான
முறையில் அகற்றப்படுகின்றன.
கிருமி
நீக்குதல்:
குளோரினேற்றம் மற்றும் புற ஊதா கதிர்கள் மூலம் இந்நீர் சுத்திகரிக்கப்பட்டு நோயை
உண்டாக்கக்கூடிய நுண்ணியிரிகள் நீக்கம் செய்யப்படுகின்றன
நீர்
மறுசுழற்சி:
இவ்வாறு சுத்திகரிக்கப்பட்ட நீர் வீட்டு உபயோகத்திற்கும் தொழிற்சாலை பயன்பாட்டுக்
காகவும் மீண்டும் பயன்படுத்தப்படுகிறது.