காரணிகள், மேலாண்மை - மண்ணரிப்பு | 10th Science : Chapter 22 : Environmental Management
மண்ணரிப்பு
மண்ணின் மேலடுக்கு, மட்கிய இலை
தழைகள், மற்றும் தாது உப்புக்கள் முதலிய, தாவரங்கள் வளர்ச்சியடையத் தேவையான அவசிய பொருட்களைக் கொண்டுள்ளது.
மேலடுக்கு மண், காற்று மற்றும் நீரோட்டத்தினால் அடித்துச்
செல்லப்படுவது “மண்ணரிப்பு" எனப்படும். மண்ணரிப்பின்
காரணமாக மண்ணின் மட்கு, ஊட்டப் பொருட்கள், வளம் ஆகியவை வெகுவாகக் குறைந்து மண் வளத்தை குறைக்கிறது.
1. மண்ணரிப்பிற்கான
காரணிகள்
அதி வேகமாக வீசும் காற்று, பெரு வெள்ளம்,
நிலச்சரிவு, மனிதரின் நடவடிக்கைகள், (வேளாண்மை, காடழிப்பு, சுரங்கங்கள்
ஏற்படுத்துதல்) மற்றும் கால்நடைகளின் அதிக மேய்ச்சல் ஆகியவை மண்ணரிப்பிற்கான
முக்கிய காரணிகளாகும்.
2. மண்ணரிப்பை
மேலாண்மை செய்யும் வழிமுறைகள்
· தாவரப்பரப்பை நிலை நிறுத்திக் கொள்வதன் மூலம் மண்ண
ரிப்பைத் தடுக்கலாம்.
· கால்நடைகளின் அதிகமான மேய்ச்சலைக்
கட்டுப்படுத்துவதன் மூலம் மண் அரிப்பை தடுக்கலாம்.
· பயிர் சுழற்சி மற்றும் மண்வள மேலாண்மை மூலம்
மண்ணில் கரிமப் பொருள்களின் அளவை மேம்படுத்தலாம்.
· நிலப்பரப்பில் ஓடும் நீரினை நீர்பிடிப்பு
பகுதிகளில் சேமிப்பதன் மூலம் மண் அரிப்பைத் தடுக்கலாம்.
· காடுகள் உருவாக்கம், மலைகளில்
நிலத்தை சமப்படுத்துதல், நீரோட்டத்திற்கு எதிர்திசையில் மண்
உழுதல் ஆகியவை மூலம் மண் அரிப்பை தடுக்கலாம்.
· காற்றின் வேகத்தை மட்டுப்படுத்த அதிக பரப்பில்
மரங்களை நடுவதன் மூலம் (பாதுகாப்பு அடுக்கு) மண் அரிப்பை தடுக்கலாம்.