பதப்படுத்தப்பட்ட மாதிரிகள் - தாவரவியல் செய்முறைகள் - இருவிதையிலை விதை | 12th Botany : Practicals
பதப்படுத்தப்பட்ட மாதிரிகள்
சோதனை எண் 6: இருவிதையிலை விதை
நோக்கம்
:
இருவிதையிலைத் தாவர விதையைக் கண்டறிதல்.
கொள்கை: கருவுற்ற
சூல் விதை என்றழைக்கப்படும். இது கரு, கருவூண்திசு மற்றும் பாதுகாப்பு உறையைக் கொண்டுள்ளது.
விதைகள் கருவூண்திசு கொண்டவையாகவோ அல்லது கருவூண்திசு அற்றவையாகவோ இருக்கலாம்.
தேவையானவை: கொண்டைக்கடலை,
நீர்.
கொண்டைக்கடலை விதைகள் அல்லது பயறு விதைகளை 2 - 3 மணி நேரம் நீரில்
ஊற வைக்கவும். நீரை வடித்துவிட்டு ஈரமான பருத்தித் துணியில் 2 - 3 நாட்கள் விதைகளைப்
பரப்பி வைக்கவும். முளைப்பதை உற்று நோக்கவும். முளைத்த சில விதைகளைத் தேர்ந்தெடுத்து
எளிய நுண்ணோக்கியில் வைத்து உற்று நோக்கி, விதையின் பாகங்களைப் பதிவு செய்யவும்.
• கொண்டைக்கடலை பயறின் விதை இரண்டு விதையிலைகளையும்
ஒரு கரு அச்சினையும் கொண்டுள்ளது.
• ஒவ்வொரு விதையும் விதை வெளியுறை (டெஸ்டா)
மற்றும் விதை உள்ளுறை (டெக்மன்) எனும் இரண்டு விதையுறைகளால் சூழப்பட்டுள்ளது.
• கரு அச்சு முளை வேரையும், முளைக் குருத்தையும்
கொண்டுள்ளது.
• விதையிலை குருத்து விதையிலைப் பகுதிக்கு
மேலுள்ள கரு அச்சுப் பகுதி விதையிலை மேற்தண்டு என அழைக்கப்படும். இது முளைக் குருத்தில்
முடிவடையும்.
• விதையிலைப் பகுதிக்குக் கீழுள்ள கரு அச்சுப்
பகுதி விதையிலைக் கீழ்தண்டு என்றழைக்கப்படும். இது வேரடுன அலலது முளைவேரில் முடிவடையும்.