பதப்படுத்தப்பட்ட மாதிரிகள் - தாவரவியல் செய்முறைகள் - வேறுபட்ட காரணிகள் மூலம் மகரந்தச்சேர்க்கை நடைபெறும் மலர்களின் தகவமைப்புகள் | 12th Botany : Practicals
பதப்படுத்தப்பட்ட மாதிரிகள்
சோதனை எண் 5: வேறுபட்ட காரணிகள் மூலம் மகரந்தச்சேர்க்கை நடைபெறும் மலர்களின்
தகவமைப்புகள்
நோக்கம்
:
வேறுபட்ட காரணிகள் (காற்று மற்றும் பூச்சிகள்) மூலம் மகரந்தச்சேர்க்கை நடைபெறும் மலர்களின்
தகவமைப்புகளை அறிதல்.
கொள்கை
:
மகரந்தப்பையிலிருந்து மகரந்தத்துகள் சூலக முடியைச் சென்றடையும் நிகழ்வு மகரந்தச்சேர்க்கை
என அழைக்கப்படும்.
தேவையானவை
:
மக்காச்சோள மலர்கள் அல்லது மற்ற தானிய மலர்கள், பூச்சிகளால் மகரந்தச் சேர்க்கையுறும்
(பயறு வகை) மலர்கள் - சால்வியா, கலோட்ராபிஸ், ஆஸிமம் ஆஸ்டிரேசி குடும்ப மலர்கள்.
கொடுக்கப்பட்டுள்ள மலரைக் கண்ணாடித் தகட்டின் மேல் வைத்துக் கை லென்ஸ் உதவியுடன் உற்று நோக்கவும். வெளிக் காரணிகளால் மகரந்தச்சேர்க்கையுறும் மலர்களின் தகவமைப்புகளைக் குறித்துக் கொள்ளவும்.
அ. காற்று மகரந்தச்சேர்க்கையுறும் மலர்கள் - அனிமோஃபில்லி
• மலர்கள் சிறியவை, தெளிவற்றவை, வண்ணமற்றவை,
மணமற்றவை மற்றும் பூந்தேன் அற்றவை.
• வெளிநோக்கிய மகரந்தப்பையையும், சூலக முடியையும்
கொண்டவை.
• மகரந்தத்துகள் இலகுவானவை, சிறிய துகள் அதிக
எண்ணிக்கையில் உற்பத்தி செய்யப்படுகின்றன.
• சூலகமுடி பெரியது. சில சமயங்களில் மகரந்தத்துகள்
களைப் பிடிக்கக் கிளைத்து இறகு போன்று காணப்படும்
ஆ. பூச்சிமகரந்தச்சேர்க்கையுறும்மலர்கள்-எண்டமோஃபில்லி
• மலர்கள் பகட்டானவை அல்லது பிரகாசமான வண்ணமுடையவை
மற்றும் நறுமணமுடையவை.
• மலர்கள் பூந்தேன், உண்ணத்தக்க மகரந்தத் துகள்களை
உருவாக்குபவை.
• பொதுவாக மகரந்தத்தாள்களும், சூலக முடியும்
உள்நோக்கியவை
• வழக்கமாகச் சூலகமுடி கிளைகளற்றது, தட்டையாகவோ
அல்லது மடல்களை உடையதாகவோ காணப்படலாம்.