பயன்கள்,தோற்றம் மற்றும் விளையுமிடம்,தாவரவியல் பெயர் - உணவு தாவரங்கள் - நறுமணப்பொருட்கள் மற்றும் சுவையூட்டிகள் | 12th Botany : Chapter 10 : Economically Useful Plants and Entrepreneurial Botany
நறுமணப்பொருட்கள் மற்றும் சுவையூட்டிகள்
"நறுமணம்
அனைவரையும் கவரும்" வரலாறு :
பல்லாயிரம் ஆண்டுகளாக நறுமணப்பொருட்கள் உலகமெங்கும்
பரவலாக உபயோகப்படுத்தப்படுகிறது. வெங்காயமும் பூண்டும் 2500 ஆண்டுகளுக்கு முன்பே உபயோகப்படுத்தப்பட்டதற்குப்
பதிவுகள் உள்ளன. பெரும்பான்மையான நறுமணப்பொருட்கள் மத்தியத் தரைக்கடல் பகுதி, இந்தியா
மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளைச் சேர்ந்தவை. ஸ்பானியர்களும், போர்த்துகீசியர்களும்
வணிகப் பயணங்கள் மேற்கொள்ளவும் நறுமணப்பொருட்கள், குறிப்பாக மிளகு இந்தியாவிற்குக்
கடல் பாதையைத் தேடவும் தூண்டுதலாக இருந்தது.
நறுமணப்பொருட்கள் துணை உணவுகளாக உணவு தயாரித்தலில்
உணவுக்குச் சுவையூட்ட உதவுகின்றன. நறுமணப்பொருட்கள் நறுமணத் தாவரப் பொருளாகவும், இனிப்பு
அல்லது கசப்புச்சுவை கொண்டவையாகவும் உள்ளன. சமையல் செய்முறைகளில் குறைந்த அளவுவிலேயே
நறுமணப்பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. எடுத்துக்காட்டு: மிளகு.
சுவையூட்டிகள் மாறாகக் கூர்மையான சுவையுடையவை,
சுவையூட்டும் பொருட்கள் வழக்கமாகச் சமையல் முடியும் போது சேர்க்கப்படுகின்றன. எடுத்துக்காட்டு:
கறிவேப்பிலை.
கீழ்க்கண்ட நறுமணப்பொருட்களையும், சுவையூட்டிகளையும் பற்றி விரிவாக விவாதிக்கலாம்.
தாவரவியல் பெயர்: எலிட்டரியா கார்டோமோமம்
குடும்பம்:
ஜின்ஜிபெரேசி
தோற்றம்
மற்றும் விளையுமிடம்
இது தென்னிந்தியா மற்றும் ஸ்ரீலங்காவைச் சேர்ந்தது.
ஏலக்காய் "நறுமணப்பொருட்களின் அரசி" என அழைக்கப்படுகிறது. மேற்கு தொடர்ச்சி
மலைகளிலும், வடகிழக்கு இந்தியாவிலும் முக்கியமாக விளைவிக்கப்படும் பணப்பயிராகும்.
இதன் விதைகள் மகிழ்விக்கும் நறுமணம், வெதுவெதுப்பான பண்புடன், லேசான காரச்சுவையும் கொண்டவை. மிட்டாய் தொழிற்சாலைகள், அடுமனை தயாரிப்புகள் மற்றும் புத்துணர்வு பானங்களில் நறுமணப்பொருட்களாகப் பயன்படுகிறது. குழம்புப்பொடி, ஊறுகாய், கேக்குகள் தயாரிப்பில் இதன் விதைகள் பயன்படுகின்றன.மருத்துவத்தில் தூண்டியாகவும், அபானவாயு நீக்கியாகவும் பயன்படுகிறது. வாய் நறுமணமூட்டியாகவும் பயன்படுகிறது.
தாவரவியல்
பெயர்: பைப்பர் நைக்ரம்
குடும்பம்: பைப்பரேசி
தோற்றம்
மற்றும் விளையுமிடம்
இது இந்தியாவிலுள்ள மேற்கு தொடர்ச்சி மலையைச்
சார்ந்தது. மிளகு இந்தியாவின் மிக முக்கியமான நறுமணப்பொருள். இது நறுமணப்பொருட்களின்
அரசன், இந்தியாவின் கருந்தங்கம் என்றும் அழைக்கப்படுகிறது.
மிளகின் பண்பான காரத்தன்மைக்கு அதிலுள்ள அல்கலாய்டு
பைப்பரின் காரணமாகும். கருமிளகு மற்றும் வெண்மிளகு என இருவகையான மிளகுகள் சந்தையில்
கிடைக்கின்றன
சாஸ்கள், சூப்கள், குழம்புப்பொடி மற்றும் ஊறுகாய் தயாரிப்பில் மணமூட்டப் பயன்படுத்தப்படுகிறது. மருத்துவத்தில் நறுமணத் தூண்டியாக உமிழ்நீர், வயிற்றுச் சுரப்புகளிலும், செரிப்பு மருந்தாகவும் உபயோகப்படுகிறது. மருந்துகளின் உயிர்ப்பு உறிஞ்சுதலை அதிகரிக்கிறது.
தாவரப்பெயர்: குர்குமா லாங்கா
குடும்பம்: ஜிஞ்ஜிபெரேசி
தோற்றம்
மற்றும் விளையுமிடம்
இது தெற்காசியாவைச் சேர்ந்தது. மஞ்சள் மிக
முக்கியமான நறுமணப்பொருட்களில் ஒன்று. இந்தியா மிகப் பெரிய மஞ்சள் உற்பத்தி, நுகர்வு,
ஏற்றுமதி செய்யும் நாடாகும். தமிழ்நாட்டிலுள்ள ஈரோடு மாவட்டம் சர்வதேச அளவில் மஞ்சளுக்கான
மிகப்பெரிய மொத்த விற்பனைச் சந்தையாக உள்ளது.
தொன்மையான இந்திய நறுமணப்பொருளான மஞ்சள் சமையலுக்கும்,
அலங்காரத்துக்கும், சாயமிடுவதற்கும், மருத்துவப் பயன்பாட்டிற்கும் ஆயிரக்கணக்கான வருடங்களாகப்
பாரம்பரியமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
குழம்புப்பொடியின் முக்கியப் கலவைப் பொருளாக
உள்ளது. மருந்தக, இனிப்புப் பண்ட, உணவகத் தொழிற்சாலைகளில் மஞ்சள் நிறமூட்டியாகப் பயன்படுகிறது.
பல விழாக்களில் மஞ்சள் தடவிய அரிசி புனிதமாகவும், மங்களகரமானதாகவும் உபயோகிக்கப்படுகிறது.
இது மேலும், தோல், நூல், பேப்பர் மற்றும் விளையாட்டுப் பொருட்களை நிறமூட்டவும் பயன்படுகிறது.
இதன் மஞ்சள் நிறத்திற்குக் காரணம் குர்குமின்
என்ற வேதிப்பொருளாகும். குர்குமின் ஒரு நல்ல ஆண்டி- ஆக்ஸிடெண்ட் இது பல வகையான புற்றுநோயை
எதிர்க்கும். இது வீக்க எதிர்ப்பி, சர்க்கரை நோய் எதிர்ப்பி , பாக்டீரீயம் எதிர்ப்பி,
பூஞ்சை எதிர்ப்பி, வைரஸ் எதிர்ப்பி செயல்பாடுகளைக் கொண்டது.
இரத்தக் குழாய்களில் தட்டையச்செல்களில் உறைதலைத் தடுப்பதன் மூலம் மாரடைப்பைத் தடுக்கிறது.
தாவரப்பெயர்: கேப்சிகம்
அன்னுவம் , கே. ஃப்ருட்டிசென்ஸ்
குடும்பம்: சொலானேசி
தோற்றம்
மற்றும் விளையுமிடம்
கேப்சிகம் தென் அமெரிக்காவைப் பூர்வீகமாகக்
கொண்டது. ஆங்கிலத்தில் சில்லீஸ் (chillies) என்றும், ரெட் பெப்பர் என்றும் பிரபலமாக
அறியப்பட்டது. இந்தியா உற்பத்தியாளராகவும், ஏற்றுமதியாளராகவும் உள்ளது. கே. அன்னுவம்,
கே. ஃப்ருட்டிசென்ஸ் மிளகாயின் விளைவிக்கப்படும் முக்கிய சிற்றினங்களாகும்.
கே. ஃப்ருட்டி சென்சஸை விடக் கே. அன்னுவம்
குறைவான காரத்தன்மை கொண்டது. கே. அன்னுவம் பெரிய, இனிப்பு குடமிளகாய் வகைகளையும் உள்ளடக்கியது.
இதன் நீண்ட கனி கொண்ட சிற்றினங்கள் கேய்னி பெப்பர் என்ற வணிகப் பெயரில் அறியப்படுபவை.
இவ்வகை மிளகாய்கள் நசுக்கப்பட்டு, பொடியாக்கப்பட்டு, சுவையூட்டியாக உபயோகிக்கப்படும்.
சூப்கள், குழம்புப் பொடிகள், ஊறுகாய் தயாரிப்புகளில் பயன்படுகிறது. கேப்சைசின் மிளகாய்களில்
உள்ள செயல்படும் கலவைக் கூறாகும். இது வலி நீக்கும் பண்பு கொண்டதால் வலி நீக்கிக் களிம்புகளில்
உபயோகப்படுத்தப்படுகிறது. மிளகாய் வைட்டமின் C, A மற்றும் E-க்கு சிறந்த மூலப்பொருளாகும்.
கேப்சைசின் மிளகாயின் காரச்சுவை அல்லது காட்டமாக இருப்பதற்குக் காரணம் மிளகாய்களின் காரத்தன்மை ஸ்கோவில்லி வெப்ப அலகுகள் (SHU-Scoville Heat Units) மூலம் அளக்கப்படுகிறது. உலகத்தின் மிகக்காரமான மிளகாய் கரோலினா ரீப்பர் 2,200,000 SHU அளவுகள் கொண்டது. இந்தியாவின் மிகக்காரமான நாகா வைப்பர் மிளகாய் 1,349,000 SHU அளவுகள் கொண்டது. பொதுவாக உபயோகிக்கும் கேய்னி பெப்பர் மிளகாய் 30,000-லிருந்து 50,000 வரை SHU அளவுகள் கொண்டது.
தாவரப்பெயர்
:
டாமெரின்டஸ் இண்டிகா
குடும்பம்: ஃபேபேசி
- சீசல்பனியாய்டியே
தோற்றம்
மற்றும் விளையுமிடம்
வெப்பமண்டல ஆப்பிரிக்கப்பகுதியை பூர்விகமாகக்
இந்தியாவில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அறிமுகப்படுத்தப்பட்டது. இது இந்தியா,
மியான்மர், தெற்காசிய நாடுகள், பல ஆப்பிரிக்க, தென் அமெரிக்க நாடுகளில் விளைவிக்கப்படுகிறது.
புளி வெகு காலத்திற்கு முன் பிருந்தே ஆப்பிரிக்காவிலும் தெற்காசியாவிலும் பயன்படுத்தப்படுகிறது.
டாமரிண்டஸ் ' என்ற அரேபியச் சொல், 'இந்தியாவின் பேரீச்சை (டமர் - பேரீச்சை, இண்டஸ்
- இந்தியா) என்று பொருள்படும்.
சூப்களை மணமூட்ட அமெரிக்காவிலும் மெக்ஸிகோவிலும்
பயன்படுகிறது. பல சமையல் தயாரிப்புகளுக்கு இந்தியாவில் இதன் பழக்கூழ் முக்கிய கலவைப்
பொருளாக உள்ளது. இனிப்புப்புளி தாய்லாந்து, மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்து இந்தியாவில்
உண்ணத் தகுந்த பழங்களாக விற்கப்படுகிறது.
சாம்பார் - உலகமே உள்ளே நாம் ஒரு சாம்பார் கிண்ணத்தைப் பார்க்கும்
போது உலகமே உள்ளே இருப்பதைக் காணமுடியும். கடுகு, சீரகம், கொத்துமல்லி போன்றவை மத்தியத்
தரைக்கடல் பகுதியிலிருந்தும், மிளகு இந்தியாவின் மேற்குத்தொடர்ச்சி மலைகளிலிருந்தும்,
மஞ்சள் தெற்காசியாவிலிருந்தும், மிளகாய் தென் அமெரிக்காவிலிருந்தும், வெங்காயம் ஆப்கானிஸ்தானிலிருந்தும்,
புளி வெப்பமண்டல ஆப்பிரிக்காவிலிருந்தும், தக்காளி தென் அமெரிக்காவிலிருந்தும், உருளை
பெரு மற்றும் பொலிவியாவிலிருந்தும், வெண்டை ஆப்பிரிக்காவிலிருந்தும் துவரை தென் இந்தியாவிலிருந்தும்
கலந்து உருவாகிச் சாம்பாரை ஓர் உலகடங்கிய உணவாக மாற்றியிருக்கிறது.